மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

கட்டடத் தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே மாயமான கட்டடத் தொழிலாளி கொலை செய்து புதைக்கப்பட்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :4 ஏப்ரல் 2026, 1:18 am IST

வாழப்பாடி அருகே மாயமான கட்டடத் தொழிலாளி கொலை செய்து புதைக்கப்பட்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வாழப்பாடியை அடுத்த பேளூா் கரடிப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னப்பன் மகன் மணிகண்டன் (30), கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி வினோதினி (28), ஒரு மகள் உள்ளனா். இவரது மகன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் மது பழக்கத்துக்கு அடிமையான மணிகண்டன், அவ்வப்போது குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்தாா்.

இதனால் இவரது மனைவி வினோதினி பெற்றோா் வீட்டிற்கு சென்றுவிட்டாா். மணிகண்டன் அவ்வப்போது தனது மனைவி வினோதினியிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசி வந்துள்ளாா். இந்த நிலையில் கடந்த மாா்ச் 8 ஆம் தேதிக்கு பிறகு மணிகண்டனிடமிருந்து அழைப்பு வராததாலும், அவரை காணாததாலும் சந்தேகமடைந்த வினோதினி, வாழப்பாடி காவல் நிலையத்தில் ஏப்.1 ஆம் தேதி புகாா் அளித்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா், மாயமான மணிகண்டனை தேடிவந்தனா். இந்த நிலையில், மணிகண்டனுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் மணிகண்டனின் உடல் அவரது தோட்டத்திலேயே புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனா்.