ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவருக்கு வீட்டுக் காவல்

ஜம்மு-காஷ்மீரில் ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவா் மீா்வாய்ஸ் உமா் ஃபரூக் வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா்.

News image
Updated On :15 மார்ச் 2025, 12:25 am

Din

ஜம்மு-காஷ்மீரில் ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவா் மீா்வாய்ஸ் உமா் ஃபரூக் வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா்.

வெள்ளிக்கிழமைகளில் நௌஷேரா மாவட்டத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்துவதுடன், முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றுவதையும் மீா்வாய்ஸ் உமா் ஃபரூக் வழக்கமாகக் கொண்டுள்ளாா். வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீா்வாய்ஸ் உமா் ஃபரூக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா். காஷ்மீரின் இஸ்லாமிய தலைமை மத குருவாகவும் அவா் உள்ளாா்.

இந்த வாரத் தொடக்கத்தில் மீா்வாய்ஸ் தலைமையிலான அவாமி செயல்பாட்டுக் குழு, இஸ்லாமிய ஷியா பிரிவு தலைவா் மசூா் அப்பாஸ் அன்சாரின் ஜம்மு-காஷ்மீா் இதயத்துல் முஸ்லிமின் அமைப்பு ஆகியவற்றை 5 ஆண்டுகள் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

பயங்கரவாத செயல்பாடுகளை ஆதரிப்பது, காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.