நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சரியாகப் படிக்கவில்லை.. மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை!

கல்வி குறைபாடு.. தந்தையின் கோபம் கொலையாக மாறியது..

News image

மகன்களைக் கொன்றுவிட்டு தந்தை தற்கொலை

Updated On :15 மார்ச் 2025, 4:21 pm IST

ஆந்திர மாநிலத்தில் சரியாகக் கல்வி கற்காத இரு மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திப் பிரதேசம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வி. சந்திர கிஷோர் - ராணி தம்பதி. இவர்களுக்கு இரு மகன்கள் இருந்தனர். 37 வயதாகும் சந்திர கிஷோர் ஓஎன்ஜிசியில் பணியாற்றும் ஊழியராவார். இவர்களது மகன்கள் இருவரும் கல்வியில் மிகவும் மோசமான நிலையிலிருந்ததாக தொடர்ந்து வருத்தமடைந்து வந்தார். கல்வி இல்லையெனில் போட்டி நிறைந்த உலகை எப்படி எதிர்கொள்ள முடியும் எனக் கவலையில் ஆழ்ந்தார்.

இந்த கவலை நாளடைவில் கடும் கோபமாக மாறியது. ஒருகட்டத்தில் மிகுந்த ஆத்திரமடைந்த கிஷோர் வெள்ளிக்கிழமையான நேற்று காலை 10 மணியளவில் தனது இரு மகன்களையும் தண்ணீர் நிறைந்த பக்கெட்டில் மூழ்கடித்துக் கொலை செய்தார். பின்னர் கிஷோர் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக கிஷோரின் மனைவி ராணி காவல்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்பு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்கொலை செய்துகொண்ட இடத்தில் ஒரு கடிதமும் மீட்கப்பட்டது. அதுதொடர்பாக தடயவியல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.