ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் லாலுவை குறிவைக்கும் பாஜக: பிரபுநாத் யாதவ்

பாஜகவை கடுமையாக சாடிய ராப்ரி தேவியின் சகோதரர்..

ராப்ரி தேவியின் சகோதரர் பிரபுநாத் யாதவ்

Published On :18 மார்ச் 2025, 5:51 pm IST

ஐஆர்சிடிசி நிலம், வேலை வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் சகோதரர் பிரபுநாத் யாதவ் பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரபுநாத் கூறுகையில்,

பாஜகவில் சேரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தூய்மையாகிறார்கள், அதேநேரத்தில் லாலு யாதவ் தனது சித்தாந்தத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாததால் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார்கள்.

ஊழல் வழக்குகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட போதிலும், மத்திய அமைப்புகளால் விசாரிக்கப்படாத அஸ்ஸாம் முதல்வர் போன்ற தலைவர்களை அவர் சுட்டிக்காட்டினார்.

லாலு பிரசாத் யாநதவ் பிற்படுத்தப்பட்ட தலைவர், எனவே பாஜகவுடன் சமரசம் செய்துகொள்ளவில்லை. தலித்துகள் மற்றும் ஏழைகள் மத்தியில் அவரது புகழ் ஆளும்கட்சிக்கு இலக்காக ஆக்குகிறது. லாலு ஏழைகளின் பக்கம் நிற்பவர் என்பதால்தான் பாஜக அவரைப் பின்தொடர்கிறது என்று அவர் கூறினார்.

லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் மீதான அமலாக்கத்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, மிசா பாரதி, தேஜ் பிரதாப் யாதவ் பாட்னாவில் விசாரணைக்கு இன்று ஆஜராகினர்.

வேலைக்கு நிலம் மோசடியில் அனுப்பப்பட்ட சம்மனுக்கு தேஜ் பிரதாப் யாதவ் பதிலளித்தார். தேஜ் பிரதாப் யாதவை அமலாக்கத்துறை நேரடியாக விசாரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரையில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தாா். அப்போது தனது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், பினாமிகள் பெயரில் லஞ்சமாக நிலங்களைப் பெற்றுக் கொண்டு ரயில்வே பணிகளை ஒதுக்கீடு செய்ததாக லாலு மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக அமலாக்கத்துறை லாலு குடும்பத்தினரைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.