மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நக்சல்களுக்கு எதிராக கருணையற்ற அணுகுமுறை: அமித் ஷா!

பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மற்றொரு பெரிய வெற்றி...

News image
அமித் ஷா
Updated On :20 மார்ச் 2025, 10:13 am

DIN

நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான தனது பயணத்தில் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மற்றொரு பெரிய வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமித் ஷாவில் எக்ஸ் பதிவில்,

நக்சல்கள் சரணடை அனைத்து சந்தர்பங்களும் வழங்கப்பட்ட போதிலும் சரணடையாத தீவிரவாதிகளுக்கு எதிராக நரேந்திர மோடி அரசு இரக்கமற்ற அணுகுமுறையைச் செலுத்தி வருகின்றது. பாதுகாப்புப் படையினர் இன்று மற்றொரு பெரிய வெற்றியைக் கண்டுள்ளனர்.

அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் நக்சல் இல்லாத நாடாக மாறப்போகிறது என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

இன்று காலை சத்தீஸ்கரில் நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நக்சல்கள் 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் காவலர் ஒருவர் வீர மரணடைந்துள்ளார்.

பிஜப்பூர் மாவட்டத்தில் 18 நக்சல்களும், கான்கர் பகுதியில் நான்கு மாவோயிஸ்டுகள் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மற்றும் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவல்படை (DRG) ஆகியவற்றின் கூட்டுக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிபொருள்கள் மீட்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.