சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் 6 மாதங்களுக்கு இடைநீக்கம்! என்ன காரணம்?

சட்டப்பேரவையை விட்டு வெளியேற மறுத்த பாஜகவினர் பாதுகாவலர்களால் வெளியே தூக்கிச் செல்லப்பட்டனர்.

News image

கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்படும் பாஜக எம்.எல்.ஏ. - PTI

Updated On :21 மார்ச் 2025, 7:50 pm IST

கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தங்களில் 4% இடஒதுக்கீடு கொடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் பேரவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் சென்று அவர்மீது காகிதங்களை வீசி எறிந்தனர்.

இடைநீக்க உத்தரவை மாநில சட்டம் மற்றும் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.கே. பாட்டீல் முன்மொழிய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த இடைநீக்க உத்தரவை வெளியிட்ட பேரவைத் தலைவர், “இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் இருக்கை அல்ல. இது ஜனநாயகம், உண்மை, நீதியின் சின்னம். இந்த இருக்கையில் அமர்ந்து பேசுவது பெருமைமிகுந்த ஒன்றாகும்.

ஒவ்வொரு உறுப்பினரும் இந்த இருக்கையின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாக்க வேண்டும். நாம் யாரும் இந்த இருக்கையை விட உயர்ந்தவர்கள் அல்ல. நமது தனிப்பட்ட உணர்வுகள் இந்த இருக்கையின் கண்ணியத்தை விட உயர்ந்ததாக இருக்கக்கூடாது.

நாம் அர்ப்பணிப்புடன், அமைதியாகவும், நாகரிகமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்தச் சம்பவம் நமக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். இனிவரும் காலங்களில் அரசியலமைப்பையும் இந்த இருக்கையின் புனிதத்தையும் மதிப்போம்.

சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதையும், பேரவைத் தலைவரின் கண்ணியத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதையும், அவையின் மரபுகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதையும் பொறுத்துக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேற மறுத்ததைத் தொடர்ந்து அனைவரும் பாதுகாவலர்களால் வெளியே தூக்கிச் செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.