கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

2019-க்குப் பின் இந்தியாவில் இனக் கலவரம் 94% அதிகரிப்பு! -பாஜக அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பாஜக அரசு பதவியேற்றதும் வன்முறை 94% அதிகரிப்பு!

News image

ANI

Updated On :21 மார்ச் 2025, 7:52 pm IST

புது தில்லி : பாஜக அரசு பதவியேற்றதும் நாட்டில் இனக் கலவரம் 94 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மாநிலங்களவையில் இன்று(மார்ச் 21) பேசியதாவது:

“2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இனக் கலவர வழக்குகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், 94 சதவிகிதம் அதிகரித்திருப்பது தெரிய வருகிறது.

இனக் கலவரம் எதனால் ஏற்படுகிறது? நீங்கள்(பாஜக தலைவர்கள்) வெறுப்பு கருத்துகளை பேசிகிறீர்கள். உங்களை சார்ந்தோர்(பாஜகவினர்) வெறுப்புணர்வு கருத்துகளை பேசுகிறார்கள்.

ஒட்டுமொத்த தேசமும் மேம்பாடு அடைந்த நிலை என்ற இலக்கை நோக்கி நகரும்போது, நீங்கள் நாட்டில் வெறுப்பைப் பரப்புகிறீர்கள்” என்றார்.

Story image

மேலும், மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் ஏற்பட்ட கலவரத்தைக் குறிப்பிட்டு பேசியுள்ள அவர், மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசை கடுமை விமர்சித்துள்ளார்.

“இரட்டை என்ஜின் அரசு என்று சொல்லிக்கொள்ளும் பாஜக தாங்கள் ஆட்சி நடத்தும் மகாராஷ்டிரத்தில் குற்றம் நடப்பின், அதற்கு ஒரு முறையல்ல இருமுறை பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் பாஜக அரசுக்கு இருப்பதாகவும்” மாநிலங்களவையில் அவர் விமர்சித்துள்ளார்.

இரட்டை என்ஜின் அரசு ஆட்சிபுரியும் மாநிலங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும் தேசிய குற்ற தரவுப் பிரிவின் தரவுகளைச் சுட்டிக்காட்டி அவர் பேசியுள்ளார்.

“உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2020-இல் 6,57,925 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021-இல் 6,80,082 வழக்குகளும், 2022-இல் 7,53,675 வழக்குகளும் பதிவாகியுள்ளன. உ.பி.யைப் போலவே, தில்லியிலும், ஜம்மு காஷ்மீரிலும் குற்ற வழக்குகள் அதிகரித்திருப்பதாக் தரவுகள் வெளிக்காட்டுகின்றன” என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.