திருமலை திருப்பதி கோயிலில் ஹிந்து மதத்தினர் மட்டுமே பணியமர்த்தப்படுவர் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது பேரன் பிறந்தநாளையொட்டி, திருமலை திருப்பதி கோயிலில் தரிசனம் மேற்கொள்ள குடும்பத்துடன் சென்றார். இதனைத் தொடர்ந்து, ஒருநாள் பிரசாத செலவை ஏற்று, அறக்கட்டளைக்கு ரூ. 44 லட்சம் நன்கொடையையும் அளித்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, ``திருமலை கோயில்களில் ஹிந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். திருப்பதி மலையில் வேற்று மதத்தவர்கள் பணியில் ஈடுபடாத வகையில் நடவடிக்கைககளும் எடுக்கப்படும். இருப்பினும், பிற மதத்தவர்கள் தற்போது பணிபுரிந்தால், அவர்களுக்கு வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவர்.
வெளி மாநிலங்களின் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்படும். இதற்கான ஒத்துழைப்புகோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதவுள்ளேன்.
அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் வெங்கடேஸ்வர சுவாமியின் கோயில்கள் நிறுவப்பட வேண்டும் என பக்தர்கள் பலரும் விரும்புகிறார்கள். இதனைக் கருத்தில்கொண்டும் கோயில்களை கட்டுவதற்காக புதிய அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்
தமிழ்நாடு திராவிட நாகரிகத்தின் மையம்: ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு

தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடு

அமராவதி-குழப்பம் தீர்ந்தது!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

