ஜார்க்கண்டில் கருகிய நிலையில் பெண் மற்றும் அவரின் இரட்டை குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 22 வயது பெண் மற்றும் அவரது இரட்டை குழந்தைகளின் சடலங்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு பிரதாப்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள கரிஹாரா கிராமத்தில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக அவர்கள் மேலும் கூறினர்.
சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பிரதாப்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் காசிம் அன்சாரி தெரிவித்தார்.
இந்த மரணங்கள் தற்செயலானதா, அல்லது தற்கொலையா அல்லது யாராவது கொலை செய்தனரா என்பது விசாரணையில் தெரியவரும் என்று அவர் கூறினார்.
இறந்த பெண்ணின் கணவர் தில்லியில் வேலை செய்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஸ்துமா உள்ள குழந்தைகள் வெளியில் விளையாடலாமா?

குழந்தையின்மைக்கு சூனியம் வைத்ததாக சந்தேகம்! ஜார்க்கண்டில் பெண் அடித்துக் கொலை!

பெண் ஊழியருக்குத் தொல்லை: துப்புரவுத் தொழிலாளி கைது

குழந்தை தத்தெடுப்பு நடைமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்: மாநிலங்களுக்கு சிஏஆா்ஏ அறிவுறுத்தல்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

