உத்தரப் பிரதேசத்தில் காகித ஆலையில் பாய்லர் வெடித்த சம்பவத்தில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், போஜ்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள காகித ஆலையில் வெள்ளிக்கிழமை பாய்லர் வெடித்தது. இந்த சம்பவத்தில் 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.
பலியானவர்கள் யோகேந்திரா, அனுஜ் மற்றும் அவ்தேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் ஆலையில் பணியில் இருந்தபோது காலை 6 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
திடீரென்று பாய்லர் வெடித்ததால் மூன்று தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டு 50 அடி தூரத்தில் விழுந்தனர் என்று காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
துணை காவல் ஆணையர் சுரேந்திர நாத் திவாரி, தொழிற்சாலை உரிமையாளர் அவ்னீஷ் மோடிநகரில் வசிக்கிறார். ஆலை லேமினேஷன் பேப்பர் தயாரிக்கிறது என்று கூறினார்.
பலியான கூலித் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று திவாரி மேலும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வங்கதேச கேஸ் லைட்டா் ஆலையில் தீ 5 போ் பலி

பிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 4 பேர் பலி!

சேஷசாயி காகித ஆலையில் தேசிய தொழிலாளா் பாதுகாப்பு வார விழா

புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் உலக மகளிா் தின விழா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


