ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கோப்புப்படம்.

Updated On :30 மார்ச் 2025, 9:45 am

DIN

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு பெட்டிகளில் தடை செய்யப்பட்ட கோடீன் வகை இருமல் சிரப் பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து 238 இருமல் சிரப் பாட்டில்களை போலீஸார் கைப்பற்றினர்.

டாக்ஸி ஓட்டுநரான அந்த நபரின் இரு சக்கர வாகனம், ரூ.1,800 ரொக்கம் மற்றும் மொபைல் போன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் போதைப்பொருள் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார், இளைஞரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இருமல் சிரப் பாட்டிலின் மதிப்பு ரூ.53,550 இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.