மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பாக்., கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டா பக்கங்கள் முடக்கம்! காரணம் என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம்

Published On :

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது எனக் கூறப்படும் நிலையில் அந்நாட்டுக்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

அதில் ஒன்றாக, பாகிஸ்தானின் விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து இந்தியாவில் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான், சாஹின் ஷா அஃப்ரிடி உள்ளிட்ட முக்கிய வீரர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

தற்போது, அவர்களது நாட்டில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடி வரும் அவர்கள் மூவரது சமூக வலைதளப் பக்கங்களையும் இந்தியாவிலிருந்து கணிசமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

இருப்பினும், அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற வீரர் அர்ஷத் நதீம், மஹிரா கான், அலி ஜாஃபர் உள்ளிட்ட பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான சோயிப் அக்தர், ஷாஹித் அஃப்ரிடி மற்றும் பாசித் அலி உள்ளிட்டோரின் யூடியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.