பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது எனக் கூறப்படும் நிலையில் அந்நாட்டுக்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.
அதில் ஒன்றாக, பாகிஸ்தானின் விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து இந்தியாவில் முடக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான், சாஹின் ஷா அஃப்ரிடி உள்ளிட்ட முக்கிய வீரர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
தற்போது, அவர்களது நாட்டில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடி வரும் அவர்கள் மூவரது சமூக வலைதளப் பக்கங்களையும் இந்தியாவிலிருந்து கணிசமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.
இருப்பினும், அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற வீரர் அர்ஷத் நதீம், மஹிரா கான், அலி ஜாஃபர் உள்ளிட்ட பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.
மேலும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான சோயிப் அக்தர், ஷாஹித் அஃப்ரிடி மற்றும் பாசித் அலி உள்ளிட்டோரின் யூடியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஆதரவு!

விவிஎஸ் லக்ஷ்மனுக்கு நன்றி தெரிவித்த ஷ்ரேயாஸ் ஐயர்! காரணம் என்ன?

ஆஷஸ் தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்?

இந்தியாவின் வருங்காலத்திற்காக... ஷுப்மன் கில் மாணவர்களுக்கு ஆதரவு!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager



