மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிந்தூர் தாக்குதல்: நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை! விடியோ

சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.

News image
பாதுகாப்பு ஒத்திகை
Updated On :7 மே 2025, 10:34 am

DIN

சென்னை துறைமுகம் உள்பட இரண்டு இடங்கள் மற்றும் புதுச்சேரி என நாடு முழுவதும் 54 ஆண்டுகளுக்குப் பிறகு போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியிருக்கிறது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு இந்தியா பதில் தாக்குதலை நடத்திய நிலையில் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியுள்ளது.

எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகள் நடந்து வருகின்றன.

சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கத்தில் போர்க்கால ஒத்திகை நடைபெற்றது. கல்பாக்கத்தில் வீரர்கள், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையானது முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

மிகப்பெரிய கட்டடமைப்புகளுக்குள் தாக்குதல் நடத்தப்படும்போது, மின் விளக்குகளை அணைத்து, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற ஒத்திகைகள் நடைபெற்று வருகிறது.

தலைநகர் தில்லி மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களிலும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இங்கு சைரன்களை ஒலிக்கச் செய்து மக்களை ஓரிடத்துக்கு அழைத்துச செல்வது, போன்று நடத்திக்காட்டப்பட்டது. போர்ச் சூழலின்போது மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் மக்கள் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுளள்து.

எல்லை மாநிலங்களில் ஒத்திகை தீவிரம்

போர்க்காலத்தில் மக்கள் கூடும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மக்கள் எவ்வாறு மறைவான இடங்களில் ஒளிந்துகொள்ள வேண்டும், தப்பிச் செல்வது, பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்வது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

போர் பதற்றம் ஏற்பட்டால் அதிக அபாயத்துக்கு உரிய மாநிலங்களாக, நாட்டின் எல்லை மாநிலங்களே உள்ளன. அந்த வகையில் ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது கயிறு மூலம் உயரமான கட்டடங்களுக்குள் இருந்து மக்களை இறக்கியும் வெடிச்சப்தம் கேட்டதும் எவ்வாறு இருக்கும் இடத்திலேயே தரையில் அப்படியே படுத்துக்கொள்ள வேண்டும் என்றும் செய்துகாட்டப்பட்டது.

பயிற்சி பெற்ற பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள், மாணவர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

கடைசியாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு போர் ஏற்பட்டபோது போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்ற நிலையில், மீண்டும் இன்று நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.