திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

தில்லியில் ஒரே நாளில் 90 விமானங்கள் ரத்து!

தில்லி விமான நிலையத்தில் விமானங்களின் ரத்து குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2025, 4:43 pm IST

தில்லி விமான நிலையத்தில் ஒரே நாளில் சுமார் 90 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் அந்நாட்டிலுள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர்ப் பதற்றம் அதிகரித்து காணப்படும் நிலையில் இருநாடுகளும் தங்களது வான்வழித் தடங்களை மூடியதுடன், விமானங்களின் போக்குவரத்தை மிகப் பெரியளவில் குறைத்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலுள்ள 27 விமான நிலையங்கள் மூடப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதில், தலைநகர் தில்லியின் விமான நிலையத்தில் 11 வெளிநாட்டு விமானங்களின் போக்குவரத்து உள்பட மொத்தம் 90 விமானங்களின் பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியிலிருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று (மே 8) காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரையில், அங்கிருந்த புறப்பட வேண்டிய 46 விமானங்கள் மற்றும் வரவிருந்த 33 விமானங்களின் போக்குவரத்து ரத்தாகியுள்ளன.

இருப்பினும், தில்லி விமான நிலையத்தின் 4 விமான ஓடுபாதை வழக்கம் போல் செயல்பட்டதாகவும், வான்வழித் தடங்களின் மாற்றத்தினால் சில விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.