தில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முன்னதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து எல்லையில் தற்போதைய நிலைமையைக் குறித்துக் கேட்டறிந்தார்.
பிரதமர் மோடியின் இல்லத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் எல்லையில் 13 பேர் உயிரிழந்தனர், சுமார் 59 பேர் காயமடைந்தனர். இதனால் ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்களில் சீல் வைக்கப்பட்டுள்ள நாட்டின் மேற்கு எல்லைகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் பள்ளிகள், பிற கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல மேற்கத்திய நகரங்களில் விமான சேவை மே 10 வரை மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தில்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மோடியிடம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். எல்லையில் பதற்றம் நிலவிவரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாம்பழ விவசாயிகள், ஏற்றுமதியாளா்கள், வாங்குவோா் சந்திப்பு

பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!

பிரதமர் மோடியைச் சந்திக்கும் அண்ணாமலை?

பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46




