பஞ்சாபில் தாக்குதல்? ஏவுகணை பாகங்கள் கண்டெடுப்பு!

பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் எல்லையில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஏவுகணையின் உதிரி பாகங்கள்
பஞ்சாப் எல்லையில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஏவுகணையின் உதிரி பாகங்கள்
Published on
Updated on
1 min read

பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்கி அழித்துள்ளது.

இதில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் உள்பட 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார்.

இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 15 இந்தியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பஞ்சாப் எல்லையில் அமிர்தசரஸ் - பட்டாலா சாலையில் ஜெதுவால் கிராமம் அருகே ஏவுகணையின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய பிஎல்- 15இ ஏவுகணை எனத் தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் ஜே-10சி போர் விமானம் மூலமாக ஏவப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com