முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

4000 கி.மீ.-க்கு அப்பால்... அமெரிக்க - பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்கிய ஈரான்!

அமெரிக்க - பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது பற்றி...

News image

ஏவுகணைத் தாக்குதல் - கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 11:59 am IST

அமெரிக்க - பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து இரு ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் டியாகோ கார்சியா என்கிற தீவு அமைந்துள்ளது. பிரிட்டன் வசம் உள்ள இந்தத் தீவில் ஈரானுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ராணுவப் படையை நிலைநிறுத்த பிரிட்டன் அனுமதித்தது.

இங்குள்ள அமெரிக்க - பிரிட்டன் ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தியதாக நேற்று (மார்ச் 20) செய்திகள் வெளியாகின.

ஈரான் எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 4000 கி.மீ.-க்கு அப்பால் உள்ள தீவில் தாக்குதல் நடத்த முயற்சி செய்த நிலையில் இரு ஏவுகணைகளும் இலக்கைத் தாக்கவில்லை. ஆனால், இவ்வளவு அதிக தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் ஈரானிடம் இருப்பது இந்தச் சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

ஒரு ஏவுகணை ஏவிய பின்னர் செயலிழந்த நிலையில், மற்றொரு ஏவுகணை அமெரிக்கப் போர்கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட இடைமறித்து தாக்கும் ஏவுகணையால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

ஆனால், அமெரிக்க அரசு இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

ஆசியா சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கியத் தளமாக இந்தத் தீவைப் பயன்படுத்தி வரும் அமெரிக்கா அங்கு குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தும் விமானங்கள் மற்றும் பல போர் உபகரணங்களை நிலைநிறுத்தியுள்ளது.

1960-களில் இருந்து தனது வசம் வைத்திருந்த சாகோஸ் தீவுகளை பிரிட்டன் அரசு மொரீஷியசுக்கு திருப்பி அளிக்க ஒப்புக்கொண்டது. மேலும், இந்தத் தீவுகளில் மிகப்பெரியதான டியாகோ கார்சியாவை ஒப்பந்த முறையில் தற்போது பிரிட்டன் பயன்படுத்துகின்றது. இந்த முடிவுக்கு டிரம்ப் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran targets US-UK base 4,000 km away in Diego Garcia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.