சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தெலங்கானா: கண்ணிவெடித் தாக்குதலில் 3 காவல் அதிகாரிகள் பலி!

தெலங்கானாவில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 3 காவல் துறை அதிகாரிகள் பலியானதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2025, 1:49 pm IST

தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடித் தாக்குதலில் அம்மாநில காவல் துறை அதிகாரிகள் 3 பேர் பலியாகியுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் காவல் துறையினர் இன்று (மே 8) காலை 7.30 மணியளவில் வெடிகுண்டுகளைக் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வஸீது காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அங்கு மாவோயிஸ்டுகள் நிறுவியிருந்த ஐ.ஈ.டி. எனப்படும் நவீன கண்ணிவெடியானது வெடித்து சிதறியது. இதில், 3 போலீஸ் அதிகாரிகள் சம்பவயிடத்திலேயே பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் அங்குள்ள வனப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பினர் நிறுவியுள்ளதாகவும், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவாதாகவும் காவல் துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளாக செயல்பட்டு வந்த நபர்கள் பெரும்பாலானோர் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.