ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் பலியானார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் முகமது இம்தேயாஸ் பலியானார்.
மேலும் 7 வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் ஆர் எஸ் புரா செக்டாரில் நடந்ததாக அவர் மேலும் கூறினார்.
சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலாவதாக இந்தியா-பாகிஸ்தான் அறிவித்திருந்தன.
ஆனால், இப்போது இந்திய எல்லைப் பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பாதுகாப்பு காரணம் கருதி, ஜம்மு-காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் ஒருசிலஇடங்களிலும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அழகான (அமைதியான) காஷ்மீர்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மோதல்களில் கொல்லப்படும் மக்கள்- மத்திய அமைச்சா் சஞ்சய் சேத்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீஸாரால் 20 போ் சுட்டுக் கொலை: சா்வதேச சமூகம் கண்டிக்க இந்தியா வலியுறுத்தல்

இந்திய அகதிகளுக்கான பேரவை இடங்களின் ரத்துக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: வன்முறையில் 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




