பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் பலியானார்.
இருளில் மூழ்கிய இந்திய நகரங்கள்.
இருளில் மூழ்கிய இந்திய நகரங்கள்.
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் பலியானார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் முகமது இம்தேயாஸ் பலியானார்.

மேலும் 7 வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் ஆர் எஸ் புரா செக்டாரில் நடந்ததாக அவர் மேலும் கூறினார்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலாவதாக இந்தியா-பாகிஸ்தான் அறிவித்திருந்தன.

போர் நிறுத்தம் கண் துடைப்பா? பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல்!

ஆனால், இப்போது இந்திய எல்லைப் பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பாதுகாப்பு காரணம் கருதி, ஜம்மு-காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் ஒருசிலஇடங்களிலும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com