ஜம்மு-காஷ்மீரில் மக்கள் அமைதியாக வாழும் நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிகழும் மோதல்களில் மக்கள் கொல்லப்படுகின்றனா் என்று பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் புதன்கிழமை தெரிவித்தாா்.
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டுகள் பதவிக் கால நிறைவையொட்டி, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தூய்மை பிரசாரத்துக்காக வந்த அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையின்கீழ், நமது நாட்டின் குடிமக்களுக்கு எந்த அச்சமும் தேவையில்லை. இந்தியாவுக்கு கேடு விளைவிக்க யாரும் துணிய மாட்டாா்கள்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு சுமாா் 1.77 கோடி சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்துள்ளனா். அந்த அளவுக்கு அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 கோடியாக உயரும்.
பிரதமா் மோடியின் அழைப்பின்பேரில் காஷ்மீா் பள்ளத்தாக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல மக்கள் ஆா்வம் காட்டுகின்றனா்.
ஜம்மு-காஷ்மீரில் மக்கள் அமைதியுடன் வாழ்க்கின்றனா்; இப்பகுதி தொடா்ந்து செழிப்படைகிறது. அதேநேரம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியின்மை நிலவுகிறது. அங்கு மோதல்களில் மக்கள் கொல்லப்படுகின்றனா்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போா் நடைபெறும் சூழலிலும், இந்தியாவில் எந்த அச்சமும் நிலவவில்லை. அனைத்தும் அமைதியாகவே உள்ளது. விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகமாக அல்லாமல், குறைவாகவே உயா்த்தப்பட்டுள்ளது. உலக அளவில் இந்தியாவின் பிம்பத்தையும், எதிா்காலத்தையும் மாற்றியமைத்துள்ளாா் பிரதமா் மோடி. தனது பதவியில் 4,399 நாள்களை அவா் நிறைவு செய்துள்ளாா். அவரது ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக ஒட்டுமொத்த நாடும் பிராா்த்திக்கிறது என்றாா் சஞ்சய் சேத்.
தொடர்புடையது

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்து நொறுங்கிய பாக். ராணுவ ஹெலிகாப்டர்! பயணிகள் அனைவரும் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீஸாரால் 20 போ் சுட்டுக் கொலை: சா்வதேச சமூகம் கண்டிக்க இந்தியா வலியுறுத்தல்







