வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர் காயம்!

பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்தது பற்றி...

News image
கோப்புப்படம்
Updated On :10 மே 2025, 7:31 pm

DIN

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் மோதலை நிறுத்த இரு நாடுகளும் சனிக்கிழமை மாலை பரஸ்பரம் ஒப்புக் கொண்டது.

ஆனால், எல்லையில் போர் நிறுத்த உறுதியை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதற்கு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், பாகிஸ்தானுக்கு முழுவீச்சில் பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் எல்லையில் நக்ரோட்டா ராணுவ நிலையம் அருகே மர்ம நபர் ஒருவர் ஊடுருவ முயற்சித்ததாக வொயிட் நைட் கார்ப்ஸ் ராணுவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அந்த மர்ம நபருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற மர்ம நபரை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.