அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!
/

மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

மணிப்பூர் காவல் துறையினரின் தேடுதல் வேட்டை தொடர்பாக...

News image
Updated On :11 மே 2025, 10:02 am IST

கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூர் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மணிப்பூர் மாநிலத்தில் மிரட்டிப் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகளைப் பிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இந்த நடவடிக்கைகளின்போது ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கே.சி.பி (பி.டபிள்யூ.ஜி) அமைப்பின் 2 உறுப்பினர்களான இம்பால் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிங்தோஜம் கிரண் மெய்டேய் என்ற பொலினாவோ (29) மற்றும் இம்பால் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சொரோகைபாம் இனோச்சா சிங்கை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்,

கைது செய்யப்பட்ட இருவரும் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள பொதுமக்களிடமிருந்து மிரட்டி பணம் பறிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களிடம் இருந்து வெடிமருந்துகள் 2 செல்போன், ஆதார் அட்டை, கார் ஆகியவை தேடுதல் வேட்டையின்போது மீட்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.