தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

மணிப்பூர் காவல் துறையினரின் தேடுதல் வேட்டை தொடர்பாக...

News image
Updated On :11 மே 2025, 4:32 am

DIN

கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூர் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மணிப்பூர் மாநிலத்தில் மிரட்டிப் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகளைப் பிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இந்த நடவடிக்கைகளின்போது ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கே.சி.பி (பி.டபிள்யூ.ஜி) அமைப்பின் 2 உறுப்பினர்களான இம்பால் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிங்தோஜம் கிரண் மெய்டேய் என்ற பொலினாவோ (29) மற்றும் இம்பால் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சொரோகைபாம் இனோச்சா சிங்கை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்,

கைது செய்யப்பட்ட இருவரும் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள பொதுமக்களிடமிருந்து மிரட்டி பணம் பறிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களிடம் இருந்து வெடிமருந்துகள் 2 செல்போன், ஆதார் அட்டை, கார் ஆகியவை தேடுதல் வேட்டையின்போது மீட்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.