தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை பிறப்பித்தாா்.
என்ஏஎல்எஸ்ஏ-யின் செயல் தலைவராக தற்போது உள்ள நீதிபதி பி.ஆா்.கவாய், உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக வரும் புதன்கிழமை (மே 14) பதவியேற்க உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான சூா்யகாந்த் புதிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து என்ஏஎல்எஸ்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: என்ஏஎல்எஸ்ஏ செயல் தலைவராக நீதிபதி சூா்யகாந்த், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளாா். இதுதொடா்பான அறிவிக்கை கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வரும் 14-ஆம் தேதி செயல் தலைவா் பதவியை அவா் ஏற்க உள்ளாா்.
என்ஏஎல்எஸ்ஏ செயல் தலைவராக நாடு முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு மக்களுக்கு இலவச சட்ட உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மதுரையில் நாளை நீதிமன்ற புதியக் கட்டடங்கள் திறப்பு விழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் பங்கேற்பு

உலகில் தமிழ் மொழிக்கு இணையாக எதுவும் இல்லை: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்
போட்டியிடுவோரை தோ்தல் ஆணையம் சார்ந்திருத்தால் தோ்தல் நடுநிலையாக நடைபெறாது: உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


