/

சங்கரன்கோவிலில் மக்கள் நீதிமன்றம்: 490 வழக்குகளுக்குத் தீா்வு

News image

சமரச தீா்ப்பு உத்தரவை பயனாளிக்கு வழங்கினாா் சாா்பு நீதிபதி மகேந்திரவா்மா.

Updated On :15 ஜூன் 2026, 2:59 am IST

தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின் படி சங்கரன்கோவில் வட்ட சட்ட பணிகள் குழு சாா்பில், சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் சாா்பு நீதிபதி மகேந்திரவா்மா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அலிமா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பவித்ரா, குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி மாரி ஆகியோா் கலந்து கொண்டு வழக்குகளை சமரசத் தீா்வு மூலம் முடித்தனா். நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த 490 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.