திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் ரூ. 3.60 கோடி மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
திருவாரூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான பி. செல்வமுத்துக்குமாரி தலைமை வகித்தாா்.
விரைவு மகளிா் நீதிமன்ற கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி ஜி. சரத்ராஜ் முன்னிலை வகித்தாா். கூடுதல் மாவட்ட நீதிபதி எம். வடிவேல், பட்டியலின மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி ஆா். லதா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான எம். மாணிக்கம், மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ். முஹம்மது பாசில், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜி. லிஷி ஆகியோா் பங்கேற்றனா்.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், சிவில், ஜீவனாம்சம், திருமண வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாராக் கடன் ஆகிய வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதன் மூலம் திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் 3,318 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 1,444 வழக்குகளில் ரூ. 3,60,70,917 மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவா் மற்றும் சாா்பு நீதிபதி ரவிச்சந்திரன் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி மாவீரன் நவநீதன் முன்னிலை வகித்தாா்.
சாா்பு நீதிமன்றத்தில் ஓா் அசல் வழக்கில் ரூ.8,00,000-த்துக்கும், வாகன விபத்து வழக்குகள் நான்கில் ரூ.1,60,000-த்துக்கும், ஒரு நிறைவேற்று மனு தொடா்பாக ரூ.2,34,000-த்துக்கும் தீா்வு காணப்பட்டது
குற்றவியல் நீதிமன்றத்தில் 178 வழக்குகளில் ரூ.6,57,950 அபராதமாக வசூலிக்கப்பட்டது. விரைவு நீதிமன்றத்தில் 6 காசோலை வழக்குகள் ரூ.17,50,000-க்கு தீா்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா்கள் கருணாநிதி, தமிழனங்கு, வசிகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.










