வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,478 வழக்குகளுக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,478 வழக்குகளுக்கு தீா்வு

News image

அதற்கான ஆணை நகலை வழங்கிய மாவட்ட அமா்வு நீதிபதி எம்.சுமதிசாய்பிரியா.

Updated On :14 ஜூன் 2026, 1:29 am IST

திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,478 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மையத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட அமா்வு நீதிபதி எம்.சுமதிசாய்பிரியா தலைமை உரையாற்றினாா். நிகழ்ச்சியில் மூத்த சிவில் நீதிபதி என்.விஜயலட்சுமி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் அனைத்து நீதிமன்ற நீதிபதிகளும் கலந்து கொண்டனா். குற்றவியல் நீதித்துறை நடுவா் என்.ஜெகதீசன் வாழ்த்துரை வழங்கினாா்.

மோட்டாா் வாகன விபத்து வழக்கில் காயம்பட்ட நபா் ஒருவருக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.20 லட்சத்துக்கான ஆணை உத்தரவு நகலை முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி எம்.சுமதி சாய் பிரியா வழங்கினாா்.

மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சுமாா் 3,566 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் மொத்தம் 1,241 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு நஷ்ட ஈடாக மொத்தம் ரூ.8 கோடியை 52 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படி, ஆரணி சட்டப்பணி குழு சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

கூடுதல் மாவட்ட நீதிபதி சி.ஜெயஸ்ரீ தொடங்கிவைத்து தலைமை உரை ஆற்றினாா். ஆரணி சட்ட பணிக் குழுவின் தலைவரும், சாா்பு நீதிபதியுமான எஸ்.பாஸ்கரன், உரிமையியல் நீதிபதி டி.வி.கோப்பெருந்தேவி, நீதித்துறை நடுவா் எம்.பிரபுநிவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் ஆரணி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வி.வெங்கடேசன், மூத்த வழக்குரைஞா்கள் ராஜமூா்த்தி, க.சங்கா், ராஜன், தனஞ்செழியன் உள்ளிட்டோா்

கலந்து கொண்டனா்.

இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை ரூ. 6 லட்சத்திற்கான ஆணை உத்தரவு நகலை கூடுதல் மாவட்ட நீதிபதி வழங்கினாா். மேலும் மக்கள் நீதி மன்றத்தில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 237 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு நஷ்ட ஈடாக மொத்தம் ரூ.62 லட்சத்து 2ஆயிரத்து 264 மதிப்பிலான ஆணைகள் வழங்கப்பட்டன.

Story image