நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மீண்டும் ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் ராகுல்!

ராகுல் காந்தியின் ஜம்மு - காஷ்மீர் பயணம் குறித்து...

News image

ராகுல் காந்தி (கோப்புப் படம்)

PTI

Updated On :22 மே 2025, 2:33 pm

DIN

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வரும் மே 24 ஆம் தேதி ஜம்முவில் உள்ள பூஞ்ச் மாவட்டத்துக்கு செல்கிறார்.

பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ஜம்முவில் உள்ள பூஞ்ச் பகுதிக்கு ராகுல் செல்லவுள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏப். 22 ஆம் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு - காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.

ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க மே 24 ஆம் தேதி ஜம்முவில் உள்ள பூஞ்ச் பகுதிக்கு ராகுல் காந்தி செல்கிறார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நேரிட்டபோது, பாகிஸ்தானிலிருந்து ஷெல் மற்றும் ட்ரோன் தாக்குதல்களின்போது 27 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. வீடுகளும் வாழ்வாதாரமாக இருந்த அமைப்புகளும் சேதமடைந்ததால் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.