புது தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய 121 வங்கதேசத்தினரை அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புது தில்லியில் சட்டவிரோதமாக உரிய ஆவணங்களின்றி குடியேறி வசித்து வந்த 121 வங்கதேசத்தினரை, அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் தங்களது தாயகத்துக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக குடியேறிய இவர்கள் அனைவரும் கடந்த ஒரு வார காலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 5 இந்தியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், நரேலா தொழிற்பேட்டை காவல் நிலையத்தில், சட்டவிரோதமாக வெளிநாட்டவர் இந்தியாவில் குடியேற உதவி வரும் நபர்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் இந்தியர்கள் உரிய ஆவணங்களின்றி குடியேறியவர்களுக்கு தங்களது சொத்துக்களை வாடகைக்கு அளித்தது தெரியவந்துள்ளது.
இத்துடன், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் போலியாக தயாரித்து வழங்கும் நபர்கள் குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி காவல் துறை சாா்பில் தற்காப்பு பயிற்சி: 2,100 பெண்கள், சிறுமிகள் பங்கேற்பு

40 வயது பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 பேர் கைது!

இந்தியா வந்தார் அபிஜித் திப்கே! தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு அனுமதி!

வங்கதேசத்தவா்கள் விரைந்து நாடு கடத்தல்: மேற்கு வங்க முதல்வா் சுவேந்து உத்தரவு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



