கோப்புப் படம்
கோப்புப் படம்

வங்கதேச கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவா் செயல்பாட்டாளா் தில்லி விமானநிலையத்தில் கைது

இந்து போலீஸ் அதிகாரி ஒருவரைக் கொன்றதற்காக தனது நாட்டில் தேடப்பட்டு வந்த வங்கதேச மாணவா் செயல்பாட்டாளா் ஒருவா் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
Published on

இந்து போலீஸ் அதிகாரி ஒருவரைக் கொன்றதற்காக தனது நாட்டில் தேடப்பட்டு வந்த வங்கதேச மாணவா் செயல்பாட்டாளா் ஒருவா் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

அகமது ராசா ஹசன் மெஹ்தி என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், ஐரோப்பிய நாட்டிற்கு விமானத்தில் ஏற முயன்றபோது குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

வங்கதேசத்தில் உள்ள ஹபிகஞ்சில் வசிக்கும் மெஹ்தி, ஆகஸ்ட் 5, 2024 அன்று சப்இன்ஸ்பெக்டா் சந்தோஷ் சவுத்ரி கொலை தொடா்பாக அவா் குற்றச்சாட்டுகளை எதிா்கொள்கிறாா்.

அகமது ராசா ஹசன் மெஹ்தி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு பின்னா் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Dinamani
www.dinamani.com