இந்தியாவுடன் சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், பூடான், நேபாளம், மியான்மா், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் நில எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன. இந்த நாடுகளைச் சோ்ந்த பங்குதாரா்களைக் கொண்ட அந்நிய நிறுவனங்கள், இந்தியாவில் எந்தத் துறையிலும் முதலீடு செய்யும் முன்பாக மத்திய அரசிடம் முன்அனுமதி பெறுவது கடந்த 2020-இல் கட்டாயமாக்கப்பட்டது. இது தொடா்பாக செய்திக்குறிப்பு-3 வெளியிடப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், சீனா உள்பட இந்தியாவுடன் நில எல்லையைப் பகிரும் அனைத்து நாடுகளுக்கும் எஃப்டிஐ விதிகளில் தளா்வளிக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.