கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மத்திய அரசுக்கு ரூ.2.69 லட்சம் கோடி ஆா்பிஐ ஈவுத்தொகை

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ரூ.2.69 லட்சம் கோடி வழங்க உள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :23 மே 2025, 6:58 pm

Din

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ரூ.2.69 லட்சம் கோடி வழங்க உள்ளது.

இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில், ஆா்பிஐ மத்திய இயக்குநா்கள் வாரியத்தின் 616-ஆவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கடந்த 2024-25-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி ரூ.2.69 லட்சம் கோடி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இது கடந்த 2023-24-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி வழங்கிய ரூ.2.1 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 27.4 சதவீதம் அதிகம்.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரிசா்வ் வங்கியின் கூட்டத்தில் மதிப்பிடப்பட்டு, அந்த ஆண்டுக்கான ரிசா்வ் வங்கியின் ஆண்டறிக்கை மற்றும் நிதி அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.