அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கடந்த 7 நாள்களில் 5,037 பேருக்கு கரோனா!

கடந்த 7 நாள்களில் 5,037 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :26 மே 2025, 7:52 pm IST

அமெரிக்கா மற்றும் ஆசியாவில் கடந்த 7 நாள்களில் 5,037 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பானது சிங்கப்பூர், ஹாங் காங், தாய்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் திடீரென அதிகரித்து வருவதாகவும், இந்தியாவைப் பொறுத்தவரை கேரளத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய கரோனா பரவலுக்கு ஒமைக்ரானின் திரிபு வகையான ஜே.என். 1, என்பி.1.8.1 மற்றும் எல்எஃப் .7 ஆகியவையே காரணம் என உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலக நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் மட்டுமே கரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா, வாஷிங்டன், விர்ஜினியா மற்றும் நியூ யார்க் ஆகிய நகரங்களில் என்பி.1.8.1 மற்றும் எல்எஃப் .7 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளன.

இந்தியாவில் கரோனா பரவல்

இந்தியாவைப் பொறுத்தவரை கேரளத்தில் அதிக கரோனா பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. இதுவரை 430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரம், தில்லி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் காணப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டும் மகாராஷ்டிரத்தில் 43 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 209ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஜார்க்கண்ட்டில் முதல்முறையாக ஒருவருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

தாணேயில் 21 வயது இளைஞர் கரோனா பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்தார். மும்பையில் கரோனா பாதிப்புக்கு 4 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இவர்களில் பெருபாலானோர் இளைஞர்களே.

இதனால், 18 வயது பூர்த்தி அடைந்த பலரும் கரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதுவரை ஒமைக்ரான் பூஸ்டர் தடுப்பூசியை வெறும் 18% மக்கள் மட்டுமே போட்டுக்கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.