தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணிப்பூரில் தொடர் நிலநடுக்கம்!

மணிப்பூரில் காலை முதல் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது பதிவாகியுள்ளன.

News image

மணிப்பூரில் நிலநடுக்கம்...

National Centre for Seismology.

Updated On :28 மே 2025, 10:29 am

DIN

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தொடர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

மணிப்பூர் மாநிலத்தின் இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில் இன்று (மே 28) அதிகாலை முதல் 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் அதிகாலை 1.54 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளது. அதன் பின்னர், நோனே மாவட்டத்தில் அதிகாலை 2.26 மணியளவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காலை 10.23 மணியளவில் மீண்டும் சூராசந்திரப்பூரில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தொடர் நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.