நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

நாடு முழுவதும் 3,000-ஐ கடந்த கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :31 மே 2025, 5:18 pm IST

நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதன்படி, நாட்டில் தற்போது 3,395 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கேரளத்தில் 1,336 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் 467 பேரும், தில்லியில் 375பேரும், குஜராத்தில் 265 பேரும், கர்நாடகத்தில் 234 பேரும், மேற்கு வங்கத்தில் 205பேரும், தமிழ்நாட்டில் 185 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 117 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நேற்று ஒரே நாளில் 685 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகம் மற்றும் கேரளத்தில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் ஒரு நாளைக்கு முன்பு கரோனாவுக்கு 7 பேர் பலியாகியிருந்தனர்.

கரோனா சிகிச்சை முடிந்து சுமார் 1,435 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.