நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜார்க்கண்டில் தொழிலதிபர் சுட்டுக்கொலை

ஜார்க்கண்டி தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :1 நவம்பர் 2025, 11:15 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஜார்க்கண்டி தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலியானவர் மக்பூல் ஷேக் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், பகூர் முஃபாசில் காவல் நிலையத்தின் கீழ் உள்ள லகான்பூர் கிராமத்தில் வசித்து வந்தார்.

பகூர் முஃபாசில் காவல் நிலை அதிகாரி கௌரவ் குமார் கூறுகையில், "இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. மக்பூல் ஷேக்கை, லாலன் ஷேக் சுட்டுக் கொன்றார்.

உடனே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த மக்பூல் மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் பலியானதாக அறிவிக்கப்பட்டது."

பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக அவர்களுக்கு இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் சனிக்கிழமை தெவித்தனர்.

லாலன் ஷேக் வீட்டின் அருகிலுள்ள தேநீர் கடையில் இருந்து மக்பூல் வீடு திரும்பும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Summary

 A 45-year-old businessman was shot dead in Jharkhand's Pakur district, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.