நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஜார்க்கண்டில் தொழிலதிபர் சுட்டுக்கொலை

ஜார்க்கண்டி தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :1 நவம்பர் 2025, 4:45 pm IST

ஜார்க்கண்டி தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலியானவர் மக்பூல் ஷேக் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், பகூர் முஃபாசில் காவல் நிலையத்தின் கீழ் உள்ள லகான்பூர் கிராமத்தில் வசித்து வந்தார்.

பகூர் முஃபாசில் காவல் நிலை அதிகாரி கௌரவ் குமார் கூறுகையில், "இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. மக்பூல் ஷேக்கை, லாலன் ஷேக் சுட்டுக் கொன்றார்.

உடனே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த மக்பூல் மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் பலியானதாக அறிவிக்கப்பட்டது."

பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக அவர்களுக்கு இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் சனிக்கிழமை தெவித்தனர்.

லாலன் ஷேக் வீட்டின் அருகிலுள்ள தேநீர் கடையில் இருந்து மக்பூல் வீடு திரும்பும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Summary

 A 45-year-old businessman was shot dead in Jharkhand's Pakur district, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.