

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச. 1 தொடங்கி டிச. 19 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,
"நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிச. 1 முதல் டிச. 19 வரை கூட்டுவதற்கான மத்திய அரசின் முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஆக்கபூர்வமான கூட்டத்தொடரை எதிர்நோக்குகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய பாஜக அரசின் சார்பில் இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதுகுறித்து கூட்டத்தொடரில் விவாதிக்க வலியுறுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.