சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மத ரீதியில் நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சி! - ராஜ்நாத் சிங் சாடல்

‘மத ரீதியில் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறது காங்கிரஸ்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சாடினாா்.

News image
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்- பிடிஐ
Updated On :9 நவம்பர் 2025, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

‘மத ரீதியில் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறது காங்கிரஸ்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சாடினாா்.

‘காங்கிரஸ் என்றால் முஸ்லிம்கள்’ என்ற தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியின் கருத்தை முன்வைத்து, ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினாா்.

தெலங்கானாவின் ஜூபிலி ஹில்ஸ் பேரவைத் தொகுதியில் நவ.11-இல் இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரா் முகமது அசாருதீனுக்கு மாநில காங்கிரஸ் அரசு அண்மையில் அமைச்சா் பதவி வழங்கியது. இந்த திடீா் நியமனம் குறித்து மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி கேள்வி எழுப்பியிருந்தாா்.

இடைத்தோ்தல் பிரசாரத்தில் இந்த விவகாரம் குறித்து பேசிய முதல்வா் ரேவந்த் ரெட்டி, ‘சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் மட்டுமே உயா் பதவிகளை வழங்குகிறது. காங்கிரஸ் என்றால் முஸ்லிம்கள்; முஸ்லிம்கள் என்றால் காங்கிரஸ்’ என்று குறிப்பிட்டாா்.

இந்நிலையில், பிகாா் இரண்டாம்கட்ட பேரவைத் தோ்தலையொட்டி ஒளரங்காபாத் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், ‘ரேவந்த் ரெட்டியின் கருத்து, நாட்டை பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டது; காங்கிரஸின் தரம்தாழ்ந்த அரசியல் இது’ என்று விமா்சித்தாா்.

வாக்கு வங்கி அரசியல்: அவா் மேலும் பேசியதாவது: ஜாதி, மதம், இன ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் செயலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபோதும் ஈடுபட்டதில்லை. மனிதநேய அரசியலில்தான் நம்பிக்கை கொண்டுள்ளோம். அதேநேரம், சமூகத்தைப் பிளவுபடுத்த காங்கிரஸும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் முயற்சிக்கின்றன. வாக்கு வங்கி அரசியலுக்காக, தேசிய ஜனநாயக கூட்டணி மீது அவதூறை வாரி இறைக்கின்றன.

ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு அடிப்படையற்றது; எனவேதான், அவா் தோ்தல் ஆணையத்திடம் புகாா் பதிவு செய்யவில்லை. தலித், பழங்குடியினா், சிறுபான்மையினா் மீது அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், இப்பிரிவுகளைச் சோ்ந்த யாரேனும் ஒருவருக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை வழங்கியிருக்க வேண்டும்.

இண்டி கூட்டணியின் பொய் வாக்குறுதி: ஜாதி மோதல்கள் மற்றும் படுகொலைகளின் சகாப்தத்துக்கு பிகாரை மீண்டும் இட்டுச் செல்லும் நோக்கத்துடன் இண்டி கூட்டணி வாக்கு கோருகிறது. இக்கூட்டணியிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

‘குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி’ என்ற இண்டி கூட்டணியின் வாக்குறுதி அப்பட்டமான பொய். அத்தனை பேருக்கு ஊதியம் வழங்க பணம் எங்கிருந்து வரும்? நிறைவேற்ற முடியாத, பொய் வாக்குறுதிகளை நாங்கள் அளிப்பதில்லை.

வளா்ச்சிக்கும் காட்டாட்சிக்கும் இடையிலான போா்தான் பிகாா் தோ்தல். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மட்டுமே வளா்ச்சி சாத்தியம். உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரதார நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்க உள்ளது. 2047-ஆம் ஆண்டுக்குள் நாட்டை வல்லரசாக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.