மேக்கேதாட்டு அணையால், தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடகத்தின், தெற்கு பெங்களூரு மாவட்டத்தில் மேக்கேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் மீது அணை கட்டப்பட வேண்டும் எனும் முயற்சியை மீண்டும் தொடங்கும் நடவடிக்கையாக, மைசூரில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியுள்ளார்.
இந்த நிலையில், கர்நாடகத்தில் நிகழாண்டில் (2025) அதிகளவில் மழை பெய்துள்ளதால், தமிழ்நாட்டிற்கு அளவுக்கு அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி. அளவிலான தண்ணீர் மட்டுமே திறக்கப்பட வேண்டும். ஆனால், நாங்கள் கூடுதலாக 150 டி.எம்.சி. தண்ணீர் திறந்துள்ளோம். இது, இரண்டு மடங்கு அதிகம்.
மேக்கேதாட்டு அணையால் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. நாம் இந்தமுறை அவர்களுக்கு அதிகளவிலான தண்ணீரை திறந்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, காவிரி ஆற்றின் மீது மேக்கேதாட்டு அணையானது கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் நீர் பகிர்வு கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி கர்நாடக அரசின் திட்டத்தை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Karnataka Chief Minister Siddaramaiah has said that Tamil Nadu will not be affected by the Mekedatu Dam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
மேக்கேதாட்டுவில் நிச்சயமாக அணை கட்டுவோம்: டி.கே. சிவக்குமார்
மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கர்நாடக காங்கிரஸை எதிர்த்து பேச முடியுமா? தவெக அரசுக்கு இபிஎஸ் கேள்வி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



