பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தில்லி சம்பவம்: தேடப்பட்டு வந்த சிவப்பு கார் சிக்கியது!

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சிவப்பு நிற ஈகோ ஸ்போர்ட்ஸ் காரை ஹரியாணா காவல் துறையினர் கண்டறிந்தது குறித்து...

காவல் துறையினர் பறிமுதல் செய்த கார் - படம் / நன்றி - ஏன்என்ஐ

Published On :

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சிவப்பு நிற ஈகோ ஸ்போர்ட்ஸ் காரை ஹரியாணா காவல் துறையினர் இன்று (நவ. 12) கண்டறிந்தனர்.

ஹரியாணாவின் கந்தவாலி பகுதி அருகே ஃபரிதாபாத் காவல் துறையினர் தேடுதல் பணியில் இருந்தபோது, காரை சுற்றுவளைத்து பிடித்தனர்.

தில்லி செங்கோட்டை அருகே வெடித்த வெள்ளை நிற ஹுண்டாய் காரில் பயணித்தவர்கள் மற்றொரு காரையும் வாங்கியிருந்ததாக தில்லி காவல் துறையினர் எச்சரித்திருந்தனர். இது தொடர்பாக உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், ஃபரிதாபாத் காவல் துறையினர் சிவப்பு நிற ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்ஸ் காரை கந்தவாலி பகுதியில் கண்டறிந்தனர். தில்லி பதிவெண் உடைய இந்த கார் கந்தவாலியில் புதர் மண்டியிருந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் வாயில் அருகே நவ. 10ஆம் தேதி கார் ஒன்று மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென வெடித்துச் சிதறியது. அருகிலிருந்த மற்ற வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததால், இச்சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காவல் துறைக்கு கிடைத்துள்ள தகவலின்படி, திங்கள் கிழமை இரவு கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாக ராம் லீலா திடலில் உள்ள மசூதியில் உமர் நபி தொழுகையில் ஈடுபட்டுள்ளார். மசூதியில் இருந்து வெளியேறிய பிறகு சன்ஹெரி மசூதி வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பிற்பகல் 3.19 மணியளவில் தனது காரை நிறுத்தியுள்ளார்.

தில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்தபோது, அந்த காரை முகமது உமர் ஓட்டியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என்று விசாரணை அமைப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

Summary

delhi car blast Red EcoSport car linked to prime suspect in Delhi blast case seized

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.