கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தில்லி சம்பவம்: தேடப்பட்டு வந்த சிவப்பு கார் சிக்கியது!

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சிவப்பு நிற ஈகோ ஸ்போர்ட்ஸ் காரை ஹரியாணா காவல் துறையினர் கண்டறிந்தது குறித்து...

News image

காவல் துறையினர் பறிமுதல் செய்த கார் - படம் / நன்றி - ஏன்என்ஐ

Updated On :12 நவம்பர் 2025, 2:46 pm

தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சிவப்பு நிற ஈகோ ஸ்போர்ட்ஸ் காரை ஹரியாணா காவல் துறையினர் இன்று (நவ. 12) கண்டறிந்தனர்.

ஹரியாணாவின் கந்தவாலி பகுதி அருகே ஃபரிதாபாத் காவல் துறையினர் தேடுதல் பணியில் இருந்தபோது, காரை சுற்றுவளைத்து பிடித்தனர்.

தில்லி செங்கோட்டை அருகே வெடித்த வெள்ளை நிற ஹுண்டாய் காரில் பயணித்தவர்கள் மற்றொரு காரையும் வாங்கியிருந்ததாக தில்லி காவல் துறையினர் எச்சரித்திருந்தனர். இது தொடர்பாக உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், ஃபரிதாபாத் காவல் துறையினர் சிவப்பு நிற ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்ஸ் காரை கந்தவாலி பகுதியில் கண்டறிந்தனர். தில்லி பதிவெண் உடைய இந்த கார் கந்தவாலியில் புதர் மண்டியிருந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் வாயில் அருகே நவ. 10ஆம் தேதி கார் ஒன்று மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென வெடித்துச் சிதறியது. அருகிலிருந்த மற்ற வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததால், இச்சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காவல் துறைக்கு கிடைத்துள்ள தகவலின்படி, திங்கள் கிழமை இரவு கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாக ராம் லீலா திடலில் உள்ள மசூதியில் உமர் நபி தொழுகையில் ஈடுபட்டுள்ளார். மசூதியில் இருந்து வெளியேறிய பிறகு சன்ஹெரி மசூதி வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பிற்பகல் 3.19 மணியளவில் தனது காரை நிறுத்தியுள்ளார்.

தில்லி செங்கோட்டை அருகே கார் வெடித்தபோது, அந்த காரை முகமது உமர் ஓட்டியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என்று விசாரணை அமைப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

Summary

delhi car blast Red EcoSport car linked to prime suspect in Delhi blast case seized

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.