தில்லி குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு காது கேளாமை பாதிப்பு!

தில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களில்
தில்லி குண்டு வெடிப்பு
தில்லி குண்டு வெடிப்புAP
Published on
Updated on
1 min read

தில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பலருக்கும் காது கேளாமை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியான நிலையில், அவர்களில் 8 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவிலும், 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் (ICU), 4 பேர் நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவிலும், ஒருவர் அதிர்ச்சி சிகிச்சை மையத்திலும் (Trauma Centre) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பெரும்பாலும் காது கேளாமை, காதுகளில் வலி, கை கால்களில் வீக்கம், சிராய்ப்பு காரணங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் யாரும் நினைத்துப் பார்க்காத தண்டனை! அமித் ஷா

Summary

Red Fort blast victims suffer hearing loss, pain in ear

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com