அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்தீஸ்கர்: என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் சுக்மாவில் நிகழ்ந்த என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

News image
- File photo | PTI
Updated On :16 நவம்பர் 2025, 6:44 am

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கரின் சுக்மாவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம், பெஜ்ஜி மற்றும் சிந்தகுபா காவல் நிலையப் பகுதிகளுக்கு இடையே உள்ள காட்டு மலைகளில் நக்சல்கள் நடமாட்டம் குறித்த தகவல் கிடைத்ததையடுத்து மாவட்ட ரிசர்வ் காவல் படை குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறுகையில், இதுவரை, மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை நடந்த என்கவுன்டரில் 262 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில், சுக்மா உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவில் 233 பேரும், ராய்ப்பூர் பிரிவின் கரியாபந்த் மாவட்டத்தில் 27 பேரும் கொல்லப்பட்டனர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.