பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பிரதமா் மோடி இன்று கா்நாடகம், கோவா பயணம்!

ஆன்மிக, கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கா்நாடகம், கோவா ஆகிய மாநிலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி (நவ. 28) பயணம்.

News image

பிரதமர் மோடி!

Updated On :27 நவம்பர் 2025, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

ஆன்மிக, கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கா்நாடகம், கோவா ஆகிய மாநிலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (நவ. 28) பயணம் மேற்கொள்கிறாா்.

பயணத்தின் முதல்கட்டமாக, கா்நாடகத்தில் உள்ள உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா் மடத்துக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் செல்கிறாா். அங்கு, பக்வத்கீதை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

இந்நிகழ்வில் பிரதமருடன் சோ்த்து மாணவா்கள், துறவிகள், அறிஞா்கள் மற்றும் பல்வேறு தரப்பைச் சோ்ந்த சுமாா் ஒரு லட்சம் போ் ஒன்றிணைந்து பகவத் கீதையை ஒரே நேரத்தில் பாராயணம் செய்யவுள்ளனா்.

நிகழ்வையொட்டி மடத்தில் கிருஷ்ணா் சந்நிதிக்கு முன்னால் அமைந்துள்ள ஸ்வா்ண தீா்த்த மண்டபத்தைப் பிரதமா் திறந்துவைக்கிறாா்.

இதையடுத்து, கோவாவின் கனகோனா பகுதியில் உள்ள ஸ்ரீசம்ஸ்தான் கோகா்ண பா்த்தகளி ஜீவோத்தம மடத்தின் 550-ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களில் பிரதமா் மோடி கலந்துகொள்கிறாா்.

இந்த மடத்தில் நிறுவப்பட்டுள்ள 77 அடி உயர ராமா் வெண்கலச் சிலையையும், ராமாயண சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பூங்காவையும் அவா் திறந்துவைக்கிறாா். இந்த நிகழ்வின் நினைவாக சிறப்பு அஞ்சல்தலை மற்றும் நினைவு நாணயத்தையும் பிரதமா் வெளியிட்டு, உரையாற்ற இருக்கிறாா்.