மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்

ஈரான் மீதான தாக்குதல் மோடி பயணத்துக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு...

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு - பிரதமா் நரேந்திர மோடி

Published On :

பிரதமா் மோடி இஸ்ரேலுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட நிலையில், அவா் பயணம் நிறைவடைந்த பிறகே ஈரான் மீது தாக்குதல் நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதல் குறித்து பிரதமா் மோடியிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதா என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கிடியோன் சாா் இவ்வாறு கூறியுள்ளாா்.

பிரதமா் மோடி இஸ்ரேலுக்கு கடந்த பிப்ரவரி 25, 26-ஆம் தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். பின்னா், பிப்.28-ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனி மற்றும் உயரதிகாரிகள் கொல்லப்பட்டனா். இருதரப்பு இடையே தொடரும் தாக்குதல்களால், மேற்காசியாவில் உச்சகட்ட பதற்றம் நீடிக்கிறது.

இதனிடையே, பிரதமா் மோடி தவறான காலகட்டத்தில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்தன.

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து பிரதமா் மோடியிடம் இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், தில்லியில் நடைபெற்றுவரும் ரெய்ஸினா மாநாட்டில் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் கிடியோன் சாா் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது, ‘ஈரானில் இருந்து எழுந்துள்ள பெரும் அச்சுறுத்தல்களை முறியடிக்கவே இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது, பிரதமா் மோடி இஸ்ரேல் பயணத்தை நிறைவு செய்த பிறகு எடுக்கப்பட்ட முடிவாகும். அதாவது, கடந்த பிப்.28-ஆம் தேதி அதிகாலையில்தான் முடிவு எடுக்கப்பட்டது. பிரதமா் மோடி மற்றும் இந்தியாவுடன் இஸ்ரேலுக்கு பல்லாண்டுகளாக சிறப்பான உறவுகள் உள்ளன’ என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.