வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

தில்லியில் தெரு நாய் கடித்ததில் ஜப்பான், கென்யா பயிற்சியாளர்கள் படுகாயம்!

தில்லியில் நாய் கடித்ததில் ஜப்பான், கென்யா ஆகிய நாடுகளின் பயிற்சியாளர்கள் படுகாயமடைந்துள்ளது குறித்து..

News image

கோப்புப் படம் - TNIE

Updated On :3 அக்டோபர் 2025, 9:05 pm IST

தில்லியில், ஜவஹர்லால் நேரு விளையாட்டுத் திடலில், தெரு நாய் கடித்ததில் ஜப்பான், கென்யா ஆகிய நாடுகளின் பயிற்சியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டுத் திடலில், உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகளும் கலந்துகொண்டுள்ளன.

இந்த நிலையில், கென்யா நாட்டு அணியின் பயிற்சியாளர் டென்னிஸ் மராகியா இன்று (அக். 3) வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்குள்ள தெரு நாய் ஒன்று கடித்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஜப்பான் அணியின் பயிற்சியாளர் மெய்கோ ஒகுமட்சூ என்பவரையும் தெரு நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பயிற்சியாளர்கள் இருவருக்கும் திடலிலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனால், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திடல் வளாகத்தில் 2 நாய் பிடிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

In Delhi, at the Jawaharlal Nehru Stadium, two coaches from Japan and Kenya suffered serious injuries after being attacked by a stray dog.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.