உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை காலணியால் தாக்க முயன்ற விவகாரத்தில் வழக்குரைஞர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
தலைமை நீதிபதி மீது நடத்தப்படும் தாக்குதல் அரசியலமைப்பின் மீதும் ஜனநாயக மதிப்புகள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு சமம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மத்தியப் பிரதேச மாநிலம் கஜூராஹோ கோவிலில் கடவுள் விஷ்ணுவின் சிலை ஒன்றின் தலை, சமூக விரோதக் கும்பலால் உடைக்கப்பட்டிருந்ததாகவும், அதனை சரி செய்யுமாறு உத்தரவிடக் கோரி நீதிமன்ற அறையில் வழக்குரைஞர் கோரிக்கை வைத்துள்ளார்.
வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துடன் முரண்பட்ட வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர், தனது காலில் இருந்த காலணியைக் கழற்றி அவரைத் தாக்க முற்பட்டுள்ளார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்கள் உடனடியாக செயல்பட்டு வழக்குரைஞரை தடுத்து நிறுத்தி, அவரை கைது செய்தனர். இச்சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளதாவது, ''மனுஸ்மிருதி, சனாதனம் ஆகிய பெயரில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முற்படுவது வருந்தத்தக்க செயல்.
இந்திய தலைமை நீதிபதியை அவமதித்ததை நான் கண்டிக்கிறேன். தலைமை நீதிபதி மீது காலணியை வீசும் மனநிலையில் ஒரு வழக்குரைஞர் இருந்தால், அவர் அந்த இடத்தில் மறுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பணியிடை நீக்கமும் செய்யப்பட வேண்டும்.
மனுஸ்மிருதி மற்றும் சனாதன தர்மத்தின் பெயரால் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுபவர்கள் சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி அமைதியைக் குலைக்க முயற்சிக்கிறார்கள்; அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | அமித் ஷாவை எப்போதும் நம்பாதீர்கள்: மோடியை எச்சரித்த மமதா!
Summary
Kharge urges Centre to act decisively against lawyer who threw shoe at CJI Gavai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயா்வு: குடியரசுத் தலைவா் முா்மு ஒப்புதல்

நீதித்துறை உள்கட்டமைப்பு மேம்பாடு: உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயா் நிலைக் குழு அமைப்பு
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!

மதுரையில் நாளை நீதிமன்ற புதியக் கட்டடங்கள் திறப்பு விழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் பங்கேற்பு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



