விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஜம்மு - காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்கள்

ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு ட்ரோன்கள் பறந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

News image
ஜம்மு-காஷ்மீர்.
Updated On :11 அக்டோபர் 2025, 1:11 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீரில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு ட்ரோன்கள் பறந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

இந்த ட்ரோன்கள் சம்பா மாவட்ட சா்வதேச எல்லையையொட்டியுள்ள சல்லியாரி, சாம்லியால் ஆகிய கிராமங்கள் மீது வெள்ளிக்கிழமை இரவு பறந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை சம்பவ இடங்களை முற்றுகையிட்டு உள்ளூர் காவல் துறையுடன் இணைந்து சனிக்கிழமை காலை தீவிர தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது.

பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், போதைப்பொருள்கள் உள்ளிட்டவை ட்ரோன்கள் மூலம் கடத்தப்படுகின்றன.

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லைகளில் இந்த வகை ட்ரோன் ஊடுருவல்கள் அதிகம் நிகழ்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாதுகாப்புப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.