மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது: பிரேன் சிங்

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றி..
செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் பிரேன் சிங்
செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் பிரேன் சிங்
Published on
Updated on
1 min read

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு சட்டம் ஒழுங்கு லைமை மேம்பட்டுள்ளதாக அந்த மாநில முன்னாள் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார்.

தில்லியில் 25 எம்எல்ஏக்களுடன் ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டுத் திரும்பிய பிரேன் சிங் இம்பால் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, பாஜக ஒரு தேசிய கட்சி என்பதால், அத்தகைய முடிவுகள் தேசிய அளவில் எடுக்கப்படும் என்றார்.

தில்லிக்கு வருவதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து அரசு அமைப்பது மட்டுமல்லாமல் மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பாஜக தேசிய கட்சியைத் தவிர பிராந்திய கட்சி அல்ல என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். முடிவுகள் இங்கு எடுக்கமுடியாது. நாம் உயரதிகாரிகளிடம் செல்ல வேண்டும், முடிவுகள் தேசிய அளவில் எடுக்கப்படுகின்றன

தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருப்பவர்கள் இங்கு முடிவுகளை எடுக்க முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடையும்போது குடியரசுத் தலைவர் ஆட்சி விதிக்கப்படுகிறது என்றும், மணிப்பூர் இதுபோன்ற சூழ்நிலையை 11 முறை கண்டிருக்கிறது.

குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு, சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது என்று அவர் கூறினார். மணிப்பூர் மக்களின் தற்போதைய நிலைமை குறித்து மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் கூறினார்.

Summary

The law and order situation improved in Manipur after the President's Rule was imposed, former CM N Biren Singh said on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com