விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆந்திரத்தின் உணவைப் போல முதலீடுகளும் காரம்தான்! நாரா லோகேஷ் கிண்டல்?

ஆந்திரப் பிரதேசத்தில் கூகுள் முதலீடு குறித்து சிலர் எரிச்சலடைவதாக அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் கிண்டல்

News image
நாரா லோகேஷ் - கோப்புப் படம்
Updated On :16 அக்டோபர் 2025, 11:41 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆந்திரப் பிரதேசத்தில் கூகுள் நிறுவனத்தின் செய்யறிவு மையத்தை அமைக்கப்படவுள்ள நிலையில், அதனைக் கண்டு அண்டை மாநிலங்கள் சிலர் எரிச்சலடைவதாக ஆந்திர மாநில அமைச்சரும் முதல்வரின் மகனுமான நாரா லோகேஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்த எக்ஸ் பதிவில் நாரா லோகேஷ் தெரிவித்ததாவது, ``ஆந்திர மாநிலத்தின் உணவு காரமானது என்பர். எங்களின் முதலீடுகளும் அப்படியே. சில அண்டை மாநிலங்கள் ஏற்கெனவே எரிச்சல் அடைந்துள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் மிகப்பெரிய அளவிலான செய்யறிவு தரவு மையத்தை கூகுள் நிறுவனம் திறக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்யவிருப்பதாகவும் கூகுள் அறிவித்துள்ளது.

இந்த நிலையில்தான், அண்டை மாநிலத்தில் சிலர் எரிச்சலடைவதாக நாரா லோகேஷ் கிண்டலடித்துள்ளார்.

summary

`Andhra food is spicy', says TDP Nara Lokesh taking a jibe at neighbours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.