ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் சந்திப்பு

தில்லியில் பிரதமர் மோடியை இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூா்யா வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

News image
பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர். - ANI
Updated On :17 அக்டோபர் 2025, 3:55 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியில் பிரதமர் மோடியை இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூா்யா வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

அப்போது கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்க மேம்பாட்டில் ஒத்துழைப்பு, மீனவர்கள் நலன் உட்பட பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியா-இலங்கை இடையேயான சிறப்பு உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இருநாடுகளின் பகிரப்பட்ட வளர்ச்சிப் பயணத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிசெய்தார்.

அப்போது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தாம் இலங்கையில் மேற்கொண்ட அரசுமுறை பயணத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.

மேலும் ஒத்துழைப்பிற்கான அனைத்து துறைகளையும் உள்ளடக்கி அதிபர் அநுர குமார திசநாயகவுடன் பயனுள்ள விவாதங்களை நடத்தியதாகவும் அவர் கூறினார்.

மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூா்யா வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

PM Modi on Friday (October 17, 2025) discussed a range of issues such as development cooperation and the welfare of Indian fishermen with Sri Lankan Prime Minister Harini Amarasuriya.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.