ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!

கோவாவில் கடற்படை வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.

News image

கடற்படை வீரர், வீராங்கனைகளுக்கு இனிப்புகளை ஊட்டும் பிரதமர் - படம் - எக்ஸ் / நரேந்திர மோடி

Updated On :20 அக்டோபர் 2025, 12:46 pm IST

கோவாவில் கடற்படை வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.

ஐஎன்எஸ் போர்க்கப்பலில் கடற்படை வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு இனிப்புகளை ஊட்டி தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி தனது தீபாவளியைக் கொண்டாடினார். கடந்த சில ஆண்டுகளாகவே முப்படையின் ஏதேனும் ஒரு பிரிவைச் சேர்ந்த வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடி வருகிறார்.

அந்தவகையில் கோவாவில் ஐஎன்எஸ் போர்க்கப்பலில் கடற்படை வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடினார். ஒவ்வொருவராகச் சந்தித்துப் பேசிய மோடி, பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, துணிச்சல் மிக்க வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவது எனது அதிருஷ்டம் எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

ஐஎன்எஸ் விக்ராந்த்தான் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் ஆயுதப் படையின் பலத்தை நிரூபிக்க இது சிறந்த உதாரணமாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

Summary

PM narendra modi Celebrating Diwali with Navy personnel on board INS Vikrant

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.